நெற்குன்றம் , கரிவரதராஜ பெருமாள் - ஒர் அரிய அனுபவம். பகல் வெளிச்சத்தில் சாதாரண மாக தோன்றும் பெருமாள் , திரை இட்டு நெய் தீப ஒளியில் கண்கள் மலர்ந்து, நம்மை காண்பது போல் தோன்றுவது அபூர்வமான ஆனந்தம் இது சிற்பியின் கை வண்ணமாகவே இருந்தாலும், பெருமாள் கண்கள் மலர்ந்து நம்மை காணும்போது மனம் நிறைந்து போகிறது அண்ணாநகரின் மிக அருகில் இருந்தும் இத் தனை வருஷங்களாக இதை பற்றி ஏதும் அறியாமல் இருந்துவிட்டேன் கடவுளை காணவும் நேரமும் காலமும் கூடி வரவேண்டும் போல் இருக்கிறது சுமார் 300-400 வருஷம் பழமை வாய்ந்த இந்த கோவில் மூலஸ்தானம் மட்டும் கட்டிடமாக இருக்க, சுற்றிலும் எந்த வசதியும் இல்லாமல் , கோவில் என்று தெரியும்படி எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பதை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது .ஆனால் திருப்பணி நடந்து வருகிறது.செவ்வாய் தோறும் குறை தீர்க்க கூட்டு பிரார்த்தனை நடக்கிறது வேண்டுதல்களை எழுதி வைத்தும் , பெருமாள் காலடியில் வைத்து பூஜை செய்து பிரசாதம் அனுப்பும் முறையும் உள்ளது.கேட்டதை தந்து அருளும் வரப்ரசாதியான வரதராஜ பெருமாள் சகலவிதமான வயிற்று நோய்களையும் தீர்த்து வைப் பவராக நம்பபடுகிறது

No comments:
Post a Comment